சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு – தேர்வு தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 1,600 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது தமிழக ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சிறப்பாசிரியர் பணியிடங்கள்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துணை சேவையின் கீழ் வரும் சிறப்பாசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தையல், இசை ஓவியம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தற்போது காலியாக உள்ள 1,598 பணியிடங்கள் மற்றும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் சில பணியிடங்களுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறியதாவது, “விருப்பமுடையவர்கள் வரும் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!!
மேலும் இந்த அறிவிப்பில் “இந்த தேர்வு கணினி மூலமாக நடைபெறும். இந்த தேர்வில் 95 கொள்குறி [objective ] வகை கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதற்கு 2 மணி 30 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் தகுதிக்கேற்ற பணியினை தேர்வு செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,எஸ்.சி.ஏ மற்றும் மாற்று திறனாளிகள் தேர்வுக்கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Website is not available
I am need more information