தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!!
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TN Job “FB Group” Join Now
தமிழகம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு முறையிலான மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 25ம் தேதி 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,”1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
தருமபுரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!
மேலும் ” தேர்வு எழுதாததால் ஏற்படும் குறைபாட்டினை சரிசெய்யும் விதமாக பிரிட்ஜ் கோர்ஸ் எனும் சிறப்பு கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 30 நாட்கள் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும். இதற்கென சிறப்பு புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படும். ஒருவேளை பள்ளிகள் திறக்க தாமதமாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறும்” எனவும் கல்வி துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.