
தமிழகத்தில் ‘இந்த’ இரு பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் பண்டிகை, திருவிழா மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர் அல்லது சுற்றுலா இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அதனால் பேருந்துகளில் பொதுமக்கள் மத்தியில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்குவது வழக்கமாகும்.
Capgemini நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online Apply பண்ண விரையுங்கள்!
அந்த வகையில் நாளை மறுநாள் (ஏப்ரல்.14) தமிழ் புத்தாண்டு பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதே போன்று ரமலான் பண்டிகையும் ஏப்ரல் 22ம் தேதி அன்று பிரமாண்டமாக கொண்டாட உள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை தினங்களை வெகு விமர்சையாக கொண்டாட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download