மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் Google நிறுவனம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கங்களை அறிவித்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் மறு சுற்று பணிநீக்கத்திற்கு தயாராகி வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பணிநீக்கம் அறிவிப்பு
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக கூகுள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநீக்கம் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் கூகுள் மற்றொரு சுற்று பணிநீக்கத்திற்கு தயாராகி வருவதாக தற்போது வெளியான தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தில் மிக விரைவில் அதிக பணிநீக்கங்கள் தொடரலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – ஏப்.16 வரை காலநிலை இது தான்.. வானிலை மையம் தகவல்!
மேலும் நிறுவனம் இப்போது மிக முக்கியமான பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதன் மூலம் மக்களை நகர்த்துகிறது என தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் நிறுவன முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார் ஏற்கனவே 450 இந்திய ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கி இருக்கிறது. அது மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download