தமிழகத்தில் 37 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 37 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் 37 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் 37 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கொரோனா தொற்றின் காரணமாக, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்த 37 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் ரத்து:

கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பும் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாள் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இரு மடங்கு லாபம் தரும் அரசின் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!!

இருப்பினும் தொற்றின் பரவல் குறைந்தபாடாக இல்லாததால், அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தி உள்ளது. அதன்படி, பொதுமக்கள் அவசிய தேவை இன்றி வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் பயணிகள் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றது. பொது மக்களும் கொரோனா அச்சத்தின் காரணமாக பயணங்களை தவிர்த்து விடுகின்றனர். எனவே, தமிழகத்தில் செயல்பட்டு வந்த 37 சிறப்பு ரயில்கள் கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!