தமிழகத்தில் நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்.. தீவிர தடுப்பு நடவடிக்கை – அதிரடி கைது!

0
தமிழகத்தில் நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்.. தீவிர தடுப்பு நடவடிக்கை - அதிரடி கைது!
தமிழகத்தில் நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்.. தீவிர தடுப்பு நடவடிக்கை - அதிரடி கைது!
தமிழகத்தில் நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்.. தீவிர தடுப்பு நடவடிக்கை – அதிரடி கைது!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கும் பொருட்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தடுப்பு நடவடிக்கை:

தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வயிற்று பசியை போக்குவதற்காக தான் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மற்றும் இன்னும் சில பொருட்களை வழங்கி வருகிறது. இலவசமாவும், மலிவு விலையிலும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து தான் பல குடும்பங்கள் நாட்களை கழிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் ஒரு சிலர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, எண்ணெய் பாக்கெட்டுகள், பருப்பு போன்றவற்றை பதுக்கி, அவற்றை அண்டை மாநிலங்களுக்கு கடத்தி வருவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்தது. இதற்காக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை கையாள தொடங்கியது. குறிப்பாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்வதாகவும், ரேஷன் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – மின்சார வாரியத்தின் வழிமுறைகள்!

Exams Daily Mobile App Download

மேலும், தமிழகத்தில் ரூ, 53,71,209 மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் நவ.14 முதல் நவ.20ம் தேதிக்குள் பிடிபட்டுள்ளது. இதில் ஈடுபட்ட நபர்கள் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!