தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – மின்சார வாரியத்தின் வழிமுறைகள்!
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார் இணைப்பு:
தமிழகத்தில் மின் கட்டணம் குறித்து முறைகேடுகள் நடைபெறுவதால் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான சிறப்பு முகாம்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் எத்தனை வீடுகள் வைத்திருந்தாலும் அவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டாயம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம் – அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் எந்தவித பணமும் வசூலிக்க கூடாது எனவும், பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அந்த சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.