இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் கடும் பக்கவிளைவு – முக்கிய எச்சரிக்கை!! பொதுமக்களே கவனம்!!!
மாதவிடாய் வலி, முடக்குவாதம், வீக்கத்திற்கான மாத்திரையை எடுத்துக்கொண்டால் கடுமையான பக்கவிளைவு ஏற்படுவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பக்கவிளைவு:
சாதாரண காய்ச்சல், தலைவலியை சரிப்படுத்தும் பல்வேறு மருந்து மாத்திரைகளுக்கு இந்திய மருந்தியல் ஆணையம் தடை விதித்தும் பெரும்பாலான மருந்து கடைகளில் தடை விதிக்கப்பட்ட மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்துக்கடைகளில் இருந்து நேரடியாக மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு அட்டவணை – முழு பட்டியல் இதோ!!
இந்நிலையில், பொதுவாக MEFTAL மருந்துகள் மாதவிடாய் வலி, முடக்குவாதம், வீக்கம், பல்வலி ஆகிய வலிகளுக்கு நிவாரணியாக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மருத்துவர்களும் MEFTAL மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்குகின்றனர். இந்த மாத்திரையினை எடுத்துக்கொண்டால் 2 முதல் 8 வாரத்திற்கு பின் தோல் அரிப்பு, காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாத்திரை உட்கொண்டு ஓரிரு வாரத்திற்கு பிறகே பக்கவிளைவு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதனால், கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.