பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ பெயர் நீக்கம் – கல்வித்துறை அமைச்சர் தகவல்!

0
பாடப்புத்தகங்களில் 'இந்தியா' பெயர் நீக்கம் - கல்வித்துறை அமைச்சர் தகவல்!
பாடப்புத்தகங்களில் 'இந்தியா' பெயர் நீக்கம் - கல்வித்துறை அமைச்சர் தகவல்!
பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ பெயர் நீக்கம் – கல்வித்துறை அமைச்சர் தகவல்!

தேசிய கல்விக் கொள்கையின் படி கேரள மாநிலத்தில் பாடத்திட்டங்களில் முக்கிய பகுதிகள் நீக்கப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்ட மாற்றம்:

தேசிய கல்விக் கொள்கையின்படி மாநில அரசுகள் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கேரள மாநில பள்ளி பாடத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். அப்போது 1,3,5,7 மற்றும் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் ஜூன் 2024 இல் மாற்றம் செய்து வெளியிடப்படும்.2,4,6,8 மற்றும் 10 ம் வகுப்பு பாட புத்தகங்கள் ஜூன் 2025 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருத்தம் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு அட்டவணை – முழு பட்டியல் இதோ!!

கேரள மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை முழுவதும் அமல்படுத்தப்படாது. மத்திய அரசு நீக்கிய பாடங்களை கேரளா அரசு தனித்தனியாக தயார் செய்யும். மேலும் பாட புத்தகங்களில் இருந்து இந்தியா என்ற வார்த்தையை தவிர்த்து விட்டு பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு என் சி இ ஆர் டி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கேரள பாட புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தை நீக்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!