அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் – உணவு வழங்கல் துறை அலுவலர் விளக்கம்!
தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மாதம் தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், மளிகை பொருட்கள் போன்றவற்றை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர்.
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டம் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. அண்மையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வெளி மாநிலத்தவர்கள் பொருட்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. பயோ-மெட்ரிக் மூலமே வெளி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடியும். இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் போது பயோ மெட்ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வெளி மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு அறிவுறுத்தல்கள்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் வெளி மாநிலந்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை இது குறித்து பல புகார்கள் எழுந்தது. அப்போது பேசிய கோவை மாவட்ட உணவு பொருட்கள் வழங்கல் துறை அலுவலர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இனி மேல் பயோமெட்ரிக் இயந்திரத்தில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்பட்டு வெளிமாநிலத்தவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். மேலும் வெளிமாவட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகாரளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.