தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த திருப்புதல் தேர்வினை நடத்த சில அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.
திருப்புதல் தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்றது. நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வு கட்டாயமாக நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு – பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
அதன்படி பொது தேர்வினை இரண்டு பருவ தேர்வுகளாக நடத்த திட்டமிட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் பொதுமக்கள்! அரசின் முடிவு என்ன?
அதன்படி மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தள்ளி வைத்திருந்த திருப்புதல் தேர்வை நாளை மறுநாள் நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்வு அரசு தேர்வு துறை வழியாக மாநில அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல இந்த திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.