தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மர்ம காய்ச்சல் – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருமா??
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தினால் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மர்ம காய்ச்சல்:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியிருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஈக்கள் மூலமாக 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு வருவதாக சுகாதாரத் துறை எச்சரித்திருக்கிறது. திடீரென தமிழகத்தில் பெய்து வரும் கனமழையினால் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
அதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 50 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், ஈக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருவதனால் இதன் மூலமாக பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாயிடு, காலரா, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் மீன், இறைச்சி ஆகியவற்றை நன்றாக வேக வைத்து உண்ணும் படியும், அதிகளவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் எடுத்துக் கொள்ளும்படியும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அகவிலைப்படி 5% உயர்வு – மாநில அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும், தமிழகத்தில் கொசு மற்றும் ஈக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொது மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா எனவும் அச்சத்தில் உள்ளனர்.