பொதுமக்களின் கவனத்திற்கு.. விரைவில் அமல்படுத்தப்படும் புதிய வங்கி விதிகள்.. எச்சரிக்கையா இருங்க
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி கணக்குகள் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பல வங்கிகள் தங்களின் ATM சேவைகளுக்கான பாலிசிகளை தற்போது மாற்றியுள்ளன. அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தாண்டி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்றும், மற்ற வங்கிகளின் ATM களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இலவச பரிவர்த்தனைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், “பல வங்கிகள் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை ATM மூலம் பணம் எடுக்கும் பலனை வழங்குகின்றன. இதற்கு மேற்பட்ட கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளது”.
அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி…!! மார்ச் மாத ஊதியம் வருவதில் காலதாமதம்…!! ஏன் தெரியுமா…??
இதை தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் மற்றும் டூ ஃபாக்டர் ஆத்தென்டிஃபிகேஷன் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நீண்ட கால முதலீடுகளை ஈர்க்கும் வகையில் FDகளுக்கான வட்டி விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி பல “பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள் இனி கணக்கில் உள்ள வைப்புத் தொகையின் அடிப்படையில் வெவ்வேறு சதவீதங்களில் வசூலிக்கப்படவுள்ளது. இதை பின்பற்றி SBI மற்றும் IDFC ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முக்கிய வங்கிகள், தங்களின் விஸ்டாரா கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்படும் டிக்கெட் வவுச்சர்கள், ரினிவல் பலன்கள் மற்றும் மைல்ஸ்டோன் ரிவார்ட் போன்ற பலன்கள் இனி நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























