விரைவில் கைதாகிறாரா சீமான்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக வலம் வந்தவர் சீமான். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சீமான், சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்திய புகாரில், அவர் மீது வழக்குபதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் நேற்று ( ஆகஸ்ட் 30) ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் விரைவில் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.



























