நவம்பர் 20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை!
காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காற்று மாசுபாடு:
தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு அவசர நிலையை நெருங்கி வருவதால், இன்று முதல் ஒரு வாரத்திற்கு (நவம்பர் 20 வரை) பள்ளிகள் மூடப்படும் என்றும் அரசு அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முடிந்தவரை WFH விருப்பத்திற்கு செல்ல தனியார் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்து உள்ளார். நவம்பர் 14 முதல் 17 வரை கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சத்துணவு துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
டெல்லியில் முழு ஊரடங்கு தொடர்பான திட்டத்தை மாநில அரசு செய்து வருவதாகவும், அதை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். மக்கள் வீடுகளுக்குள் முகமூடி அணியும் அளவுக்கு மாசுபாடு நிலைமை மோசமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்த நிலையில் 2 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என கூறி இருந்தது. இது தொடர்பான பதில் மனு இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
NPCIL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை!!
ஏற்கனவே காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதனையும் மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் காற்று மாசுபாடு அபாயகரமான அளவை எட்டி உள்ளது. நேற்று நிலவரப்படி காற்று மாசுபாடு மிக மோசம் அளவிலிருந்து மோசம் என்கிற அளவுக்கு சற்று குறைந்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடு காரணமாக சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.