தமிழகத்தில் நீடிக்கும் கனமழை பாதிப்பு எதிரொலி – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பருவ மழையின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை பள்ளிகளுக்கு மழை பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் பருவ மழை காலம் தொடங்கியதில் இருந்து மிகவும் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் என்று மாறி மாறி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கனமழை காரணமாக கடந்த வாரம் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மீண்டும் தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – விரைவில் தடுப்பூசி! வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை இடைவிடாமல் பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் வெள்ள நிவாரணமாக ரூ.1,000 அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதும் மழை நீர் வடியாமல், மேலும் மழை பெய்து வருவதால் தரங்கம்பாடி மற்றும் சீர்காழி பகுதிகளுக்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.