மீண்டும் தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – விரைவில் தடுப்பூசி! வெளியான தகவல்!
இந்தியாவில் கடந்த 2018,2019 ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியது. தற்போது இந்தியா முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில் டெங்குவுக்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி:
இந்தியாவில் ஏடிஸ் எனும் ஒரு வகை கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், உடல் வலி, சருமத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது, உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் ரத்த அணுக்களின் அளவு குறையும் வாய்ப்பும் ஏற்படும்.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 2018,2019ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்தது. அதன் பிறகு சுகாதாரத்துறையின் பல்வேறு நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் குறைந்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோர்க்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக WHO தகவல் தெரிவித்துள்ளது.
சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1,000 – முதலமைச்சர் அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவில் விரைவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. டெங்குவிற்கு எதிரான தடுப்பூசியை இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் உருவாக்கி வருகிறது. தற்போது இதற்கான முதல் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.