நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!
டில்லியில் தற்போது அதிகரித்து வரும் காற்று மாசின் காரணமாக பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
வட இந்திய மாநிலங்களில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காற்றின் மாசு அளவும் அதிகரித்து உள்ளது. தற்போது டெல்லியை பொருத்தவரையில் காற்று மாசுபாடு 400 ஐ தாண்டி பதிவாகியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் மூச்சு திணறல் ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
2023 ம் ஆண்டில் மீதமுள்ள வங்கி விடுமுறை தினங்கள் – முழு விவரம் இதோ!
இந்நிலையில் டெல்லி கல்வி துறை அமைச்சர் அவர்கள் காற்று மாசுபாடு அதிகரிப்பின் காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசுபாடின் காரணமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.