தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கொண்டாட்டம்!
தமிழகத்தில் கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 15 நாட்கள் பள்ளி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது 15 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!
தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகமாக வருகை புரிந்து உள்ளனர். கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் இனிப்புகள் வழங்கி வரவேற்றுள்ளார். அதேபோல் நகராட்சி பள்ளியில் இசை தாளம் முழங்க பள்ளி மாணவ, மாணவிகளை வரவேற்றனர்.
தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் Airtel, Jio வின் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் 2129 பள்ளிகள் உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.