தமிழக அரசு சார்பில் குடும்ப நிதியுதவி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள விருது – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பத்திரிகை துறையினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள், குடும்ப நிதி உதவி உயர்வு, ரூ.5 லட்சம் மதிப்புள்ள உயரிய விருது போன்ற பல அறிவிப்புகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அரசின் ஆணை தொடர்பான விவரங்கள் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
கடந்த முறை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போது தமிழக அரசு புதிதாக கொண்டு வர இருக்கும், திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு அரசு துறைக்குமான நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவித்தனர். அரசின் அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்தது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கொண்டாட்டம்!
இந்நிலையில் தற்போது தமிழக பத்திரிகையாளர்களுக்கான பல அறிவிப்புகளின் அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது. அரசின் ஆணையின் படி, சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பத்திரிகையார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலான நலவாரியம் அமைக்கப்படும். கூடுதலாக பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் அளிக்கப்படும்.
SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!
பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியானது முன்னதாக ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில், இனி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்ல சமூக ஊடகப்பிரிவு தொடங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். 5 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி இறந்தால் குடும்பத்துக்கு ரூ.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதி வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பத்திரிகையாளர் பணியாற்றும் ஆண்டுகளை பொறுத்து உயர்த்தப்பட்ட நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.