நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – மாநில வாரியான விவரங்கள்!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்ப தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில வாரியான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நடப்பு ஆண்டில் நிலவி வரும் கடுமையான வெப்பம் குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காக்கும் விதமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
PGIMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னதாக ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறப்பு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 26 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல உத்தர பிரதேச மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறப்பானது தற்போது ஜூன் 26 ஆம் தேதி என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பாட்னாவில் ஜூன் 18ஆம் தேதி வரை விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூன் 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.