தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

0
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொட்டித் தீர்க்கும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதியிலிருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – நாளை (ஜூலை 7) முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில், நேற்று இரவு இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணத்தினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் இன்னும் கனமழை நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களை கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!