ஏப்ரல் 29 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 29 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தவிர +2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மாநிலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 22 முதல் 29 வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோடர்மா மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் தடுப்பு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோடர்மா மாவட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி நோய் பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
practical exam mundunji pochi bro leave vidala bro