ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் டெபிட் கார்டுகளுக்கு வசூலிக்கும் பராமரிப்பு கட்டண தொகையை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.
பராமரிப்பு கட்டணம் உயர்வு:
நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த நிதியாண்டு (ஏப்ரல் மாதம்) முதல் அனைத்து வரிகளும், கட்டணங்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது பயனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டு, மை கார்டு (இமேஜ் கார்டு) ஆகிய டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணமானது 175 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
IIT Madras-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.80,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணமானது 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், எஸ்பிஐ பிளாட்டினம் டெபிட் கார்டுக்கான பராமரிப்புக் கட்டணமானது 250 ரூபாயிலிருந்து 325 ரூபாயாகவும், பிரைட் பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுக்கான பராமரிப்புக் கட்டணமானது 50 ரூபாயில் இருந்து 425 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக பெறப்படும் கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இருப்பினும் புதிய கோல்டு டெபிட் கார்டுக்கு 100 ரூபாய் மற்றும் பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு 300 ரூபாய் என கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் டெபிட் கார்டை மாற்ற வேண்டுமெனில் அதற்கு ரூ.300 ரூபாயும், டூப்ளிகேட் பின் நம்பர் மற்றும் பின் மறு உருவாக்கம் செய்வதற்கு 50 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் GST யும் உடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.