
வருமான வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்.. ரூ .1.5 லட்சம் வரை விதி விலக்கு பெறலாம்.. உடனே இதை செய்யுங்க..!!
பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் வருமான வரித் துறை, பல்வேறு வரி விலக்குகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளை பயன்படுத்தி தங்கள் வரியை குறைக்க கோரி அதற்கான நன்மையைப் பெறுகிறார்கள். அந்த வகையில் வரிகளை குறைப்பதற்கான முக்கிய வரி விலக்கு பிரிவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
ரூ.1000 சேமிக்க முடிந்தால் 3 மடங்கு லாபம் – செம்ம திட்டமா இருக்கே!
அதாவது, “பிரிவு 80C என்பது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வரி குறைப்பு விதிகளில் ஒன்றாகும். இப்பிரிவின் கீழ் தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUF) அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். மேலும், அரசாங்கம் சார்ந்த சேமிப்பு திட்டங்கள் உட்பட முதலீடு மற்றும் செலவின விருப்பங்களுக்கு சிறப்பு சலுகையும் கிடைக்கும்”. இதை தொடர்ந்து, “பிரிவு 80CCC, LIC அல்லது பிற காப்பீட்டாளர்களால் வழங்கப்படும் வருடாந்திர திட்டங்களில் முதலீடுகளுக்கான விலக்குகளை அனுமதிக்கிறது. மேலும், பிரிவு 80CCD(1) மற்றும் 80CCD(1B) இன் கீழ், சம்பளம் பெறும் தனிநபர்கள் தேசிய ஓய்வூதிய முறை (NPS) பங்களிப்புகளுக்கு அவர்களின் சம்பளத்தில் 10% அல்லது ரூ.50,000 வரை விலக்குகளைப் பெறலாம். இந்தப் வரி சலுகையானது புதிய வரி ஆட்சியுடனும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது”.


























