அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு நடவடிக்கை!
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. இதனால் விரைவில் ஊதியம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு:
இந்தியாவின் தலைநகரான டில்லியில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் பணிபுரியும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுப் வந்துள்ளது.
2022ம் ஆண்டு பள்ளிகளுக்கு 113 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் பட்டியல்!
ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் ஊதிய உயர்வு வழங்க முடியாத நிலை நிலவியது. இந்நிலையில் சிறப்பு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்களை நேரில் சந்தித்து ஊதிய உயர்வு தொடர்பான கடிதத்தை அளித்துள்ளனர். இது குறித்து டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்!
அதாவது டில்லி அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் சிறப்பு வருகை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். டில்லி முதலமைச்சரின் இத்தகைய பதிவு சிறப்பு வருகை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.