Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்!
அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினமும் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம் 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வரை நீங்கள் சேமிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் வட்டி பலன்கள், முதலீட்டு தொகை குறித்த விவரங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் கொரோனா பரவலால் மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. சேமிப்பு செய்யாதவர்களின் நிலை கவலைக்கிடமானது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் சேமிப்பின் பயனை உணர்ந்தனர். தற்போது மக்கள் அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!
வங்கிகளுக்கு இணையாக அஞ்சலகங்களும் மக்கள் சேர்ந்து பயன்பெற கூடிய வகையில் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் எண்ணற்ற பலன்களை அளிக்கிறது. இந்த திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்வதன் மூலம் மாதம் 12500 ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். அதன்படி 15 ஆண்டுகளில் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் உங்கள் முதலீட்டு தொகைக்கு 7.1% வட்டித் தொகையும் கிடைக்கிறது.
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள்!
வட்டியுடன் கணக்கிட்டால் 40.68 லட்சம் கிடைக்கும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் தேவைப்பட்டால் 5 ஆண்டுகளாக நீங்கள் நீட்டிக்கலாம். அதன்படி முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும் வட்டியுடன் சேர்த்து 65.68 லட்சம் ரூபாய் கிடைக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மொத்த 25 ஆண்டு முதலீடு செய்தால், உங்கள் கைக்கு 1.03 கோடி ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கிறது. இந்த பிஎப் கணக்கை இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த சேமிப்பு கணக்கில் ஜாயின்ட் அக்கவுண்ட் வசதி கிடையாது.