தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? தவிப்பில் தொழிலாளர்கள்!
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் ஆகியும் சம்பள உயர்வு வழங்கப்படாததால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பள உயர்வு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கிட்டத்தட்ட 1.30 லட்ச தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த முறை 2019 ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளுக்கு பிறகே புதிய ஒப்பந்தத்தின் கீழ் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதாவது, அனுபவத்தின் அடிப்டையில் மூத்த ஊழியர்களுக்கு ரூ.4000மும், ஜூனியர்களுக்கு ரூ.1000மும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அதன்படி, இந்த ஆண்டு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் புதிய ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு இலவச பேருந்து திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
ஆனால், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏதும் போடப்படாத நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 4 ஆண்டுகள் முடிந்தும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாதது ஏன் என அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.