ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு இலவச பேருந்து திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு மாநில அரசு இலவச பேருந்து பயணத்தை அறிமுகம் செய்துள்ளது.
இலவச பேருந்து திட்டம்:
தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் சற்று உயர்ந்துள்ளதாகவும், மாதத்திற்கு ரூ.1500 வரை சேமிக்க முடிவதாகவும் பெண்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கேரளா மாநிலத்தில் பயிலும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக மாநில அரசு இலவச பேருந்து பயணத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்!
அதாவது, KSRTC பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இலவச பயணத்தை தொடரலாம் என மாநில அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் கடுமையான வறுமையை போகும் நோக்கிலும், ஏழை குடும்பத்தை சார்ந்த மாணவர்களும் தங்கு தடையின்றி படிப்பை தொடரும் நோக்கிலும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய சலுகை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.