50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் – பரித்தொகை குறித்த அறிவிப்பு!
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடரில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பரிசுத்தொகை அறிவிப்பு
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் விளையாட, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரின் முதல் ஆட்டம் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
இனி தமிழகத்தில் மின்சார தடைக்கு வாய்ப்பே இல்லை – Tangedco வின் மாஸ் அறிவிப்பு!
மேலும் இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது. அதே போல அரையிறுதி போட்டியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா ரூ. 6.64 கோடியும், லீக் சுற்றில் வெளியேறும் 6 அணிகளுக்கு தலா ரூ. 83 லட்சமும், லீக் போட்டிகளில் வெல்லும் அணிகளுக்கு தலா ரூ.33 லட்சமும் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.