ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு – மகிழ்ச்சியில் விவசாயிகள்!
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்த முக்கிய தகவலை இன்று பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஆவின் பால்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை சரி செய்யுமாறு பால் முகவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து ஆலோசிக்கப்பட்டு தற்போது அதிக கொழுப்பு சத்து மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இனி தமிழகத்தில் மின்சார தடைக்கு வாய்ப்பே இல்லை – Tangedco வின் மாஸ் அறிவிப்பு!
அதன்படி பாலின் தரத்துக்கு ஏற்ப உச்சபட்சமாக 7.5 சதவீதம் வரை பாலின் கொள்முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால் பால் விற்பனையில் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.