இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – பக்தர்களுக்கு அனுமதி!
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்று பக்தர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலை நடை திறப்பு:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை இயங்க அரசு தடை விதித்தது. அதனை தொடர்ந்து புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது. ஆனாலும் கோவில் ஊழியர்கள் மூலம் சுவாமிக்கு தினசரி பூஜைகள், சடங்குகள் ஆகியவை பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம் போல் நடத்தப்பட்டது. மாதாந்திர பூஜைகளுக்காக மட்டும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கோமா நிலைக்கு சென்ற ஹேமா, கதறி அழும் பாரதி – இன்றைய எபிசோட்!
இதற்கிடையில் கேரள அரசின் முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் குறிப்பட்ட மணி நேரம் மட்டும் மக்களின் தேவைக்காக கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. தளர்வின் ஒரு பகுதியாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 16ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்து கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவை தொடங்கியது. மேலும் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இன்று முதல் கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாதாந்திர பூஜைக்கு 5 நாள் திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.