தமிழகத்தில் ரூ.6,000 புயல் நிவாரணத் தொகை – அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் ரூ.6,000 புயல் நிவாரணத் தொகை - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் ரூ.6,000 புயல் நிவாரணத் தொகை - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் ரூ.6,000 புயல் நிவாரணத் தொகை – அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் மீக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள நிவாரண தொகை குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

நிவாரணத் தொகை:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலினால் வட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகவும அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்தனர். தங்களின் பல்வேறு உடைமைகளையும் இழந்து நெருக்கடியாய் தவிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 வெள்ள நிவாரண தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஜனவரி 1 முதல் இந்த வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது – நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதற்கு முன்னதாகவே ரேஷன் அட்டைதாரர்கள் வந்து செல்வதற்கு எந்தவித சிரமமும் இன்றி கடைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். வீடு தோறும் டோக்கன் வழங்குவது மற்றும் நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் ஒரு கடையில் 100 முதல் 150 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். நிவாரணத் தொகை தொடர்பான புகார்களை பெறுவதற்கு தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும். மேலும் நிவாரண தொகை வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்கு துறை அதிகாரிகள் தனி குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!