யாருக்கெல்லாம் நிவாரணத்தொகை? முதல்வர் கொடுத்த விளக்கம்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நிவாரணத்தொகை:
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், இன்னும் 7 நாட்களுக்குள் நிவாரணத்தொகை பொதுமக்களை சென்றடையும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ரேஷன் கடைகளின் வாயிலாக விரல்ரேகை பதிவின் மூலம் நிவாரணத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.4000 உரிமைத்தொகை – யார் யாருக்கு? அரசு அறிவிப்பு!!
இந்நிலையில், தகுதியுள்ள அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் எனவும், ஒருவர் கூட விடுபட்டுவிட கூடாது என்பதில் அரசு தீவிரமாக இருப்பதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் உங்கள் பகுதிகளுக்கு நேரடியாக வருகை புரிந்து பார்வையிட்ட பிறகு உங்களுக்கு நிவாரணத்தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும்.