ரூ.6,000 நிவாரண தொகை வங்கியில் செலுத்தப்படும் – தமிழக அரசின் அறிவிப்பு!
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணத் தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரூபாய் 6000 நிவாரணம்:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வேறு முகவரிகளில் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தங்களது பாதிப்பு விவரங்களையும், வங்கி கணக்கு விவரங்களையும் ரேஷன் கடைகளில் வழங்கும் விண்ணப்பங்களுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். இதில் தகுதியுடையவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates