அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு வழங்குவது போல் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவைக் காண தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரையில் பேசும்போது மாணவிகளுக்கு வழங்குவது போல் அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த வாக்குறுதி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.