குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே ரூ.1000 வழங்க திட்டம் – அரசு ஏற்பாடு!!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் முன்கூட்டியே ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் மூன்று மாதத்திற்கான தொகை குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மாதம் முன்கூட்டியே ரூ. 1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, டிசம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதனால் ஒரு நாளுக்கு முன்பாகவே அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ. 1000 வரவு வைக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பலரும் மிக்ஜாம் புயலால் உணவுக்கு கூட திண்டாடி வரும் நிலையில் முன்கூட்டியே ரூ. 1000 குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது போக, மேல் முறையீடு செய்த குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு இதுவரை செலுத்தாத மூன்று மாதத்திற்கான தொகையும் சேர்த்து மொத்தமாக ரூ.4000 அனுப்பப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.