RPF 9000 கான்ஸ்டபிள் & சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் – உண்மை நிலவரம் இதோ!
ரயில்வே பாதுகாப்புப் படையில் 9000 கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முக்கிய செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
9000 காலிப்பணியிடங்கள்:
Railway Protection Force எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆனது 9000 கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் பள்ளி திறப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
இது குறித்த முக்கிய அறிவிப்பை, RPF தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, RPF அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது எந்த அச்சு அல்லது மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு விவரங்கள் RPF அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டும் வெளியாகும் எனவும், இது போன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் RPF சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.