தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அரசுத்துறை ஊழியர்கள் நாளை முதல் சுழற்சி முறையில் பணிக்கு செல்ல வேண்டும் என்ற அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ளனர். அதே போல் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர். இதனை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு, தனியார் துறையில் 50 சதவீத ஊழியர்களுடன் தான் வேலை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது அரசுத்துறை ஊழியர்களும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று கூறி அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும் சுழற்சி முறையில் தான் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குரூப் ஏ பிரிவு அரசு அதிகாரிகள் அனைவரும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்