தமிழகத்தில் 12 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 12 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் பொதுப் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நிலைமையை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பொது போக்குவரத்தை குறைக்கும் விதமாக பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல மக்கள் ரயில்களில் பயணம் செய்ய அச்சப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் தெற்கு ரயில்வே தினமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதனால் தற்போது ரயில்வே துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (மே 5) முதல் 12 ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை,

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

  • ரயில் எண் 02627/28 திருச்சி – திருவனந்தபுரம் விரைவு ரயில்
  • ரயில் எண் 06607/08 கோயம்புத்தூர் – கண்ணூர் சிறப்பு ரயில்
  • ரயில் எண் 06327/38 புனலூர் – குருவாயூர் விரைவு ரயில்
  • ரயில் எண் 06306/07 கண்ணூர்- எர்ணாகுளம் சிறப்பு ரயில்

உள்ளிட்ட 12 ரயில்கள் வருகிற 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!