செண்பகம் தான் ரோஜாவின் அம்மா, உண்மை தெரிய போகும் நேரம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!
சன் டிவி ரோஜா சீரியலில், பரிகாரம் முடிந்ததும் கட்டாயம் செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என்று தெரிய வரும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். செண்பகம் அனுவை தன் மகள் என்று சொல்வாரா இல்லை, ரோஜாவை மகள் என சொல்வாரா? என சன் டிவி பிரபலங்கள் கேட்பது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவி ரோஜா சீரியலில், செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என நிரூபிக்க பரிகார பூஜை ஒன்றை ரோஜா நடத்துகிறார். அதில் அனுவும் கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது ரோஜாவும் அனுவும் மாறி மாறி கத்தியால் அடித்துக் கொள்கின்றனர். இதனால் ரோஜா கையில் காயமாக இருக்கிறது. ரோஜா நீண்ட நேரம் அடித்த பின்னர் மயங்கி விழுகிறார்.
இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி – இன்றைய எபிசோடில் அறிமுகம்!
அப்போது அங்கே செண்பகம் வருகிறார். ரோஜா இவ்வாறு பரிகார பூஜை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ரோஜா பூஜை செய்து மயங்கி விழுகிறார். அப்போது செண்பகம் அவரை பிடித்து விடுகிறார். செண்பகம் ரோஜா தான் தன்னுடைய மகள் என சொல்வாரா இல்லை, அனு தான் தன்னுடைய மகள் என சொல்வாரா என்கிற குழப்பத்தில் இருக்கின்றனர்.
‘பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க’ – வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!
செண்பகத்திற்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லை. அதனால் அனு தான் தன்னுடைய மகள் என சொல்ல வேண்டும் எனவும் அனுவின் அம்மாவாக நடிக்க தான் செண்பகம் வந்திருக்கிறார் என சன் டிவி சீரியல் பிரபலங்கள் பேசுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் முடிவில் உண்மை கட்டாயம் தெரிந்து விடும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.