இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி – இன்றைய எபிசோடில் அறிமுகம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று முதல் நடிகை காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வரும் காட்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. அவருக்கு இந்த கதாபாத்திரம் ஒத்துபோகுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்”
அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் சீரியல் என்று கூறினால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். எதார்த்தமாக ஒரு கூட்டு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கண்ணன் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர்.
‘பாரதி வளையல் போட, கண்ணம்மா நலங்கு வைக்க’ – வெண்பாவின் வளைகாப்பு வீடியோ வைரல்!
கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வருகின்றனர். கண்ணனை நினைத்து அவரது அம்மா லட்சுமி அவரது உடல் நலனை கெடுத்து கொள்கிறார். லேட்டஸ்டாக வெளியான ப்ரோமோவில் அவர் இறந்து விடுவது போல காட்டுகின்றனர். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை மற்றும் விஜே தீபிகா நடித்து வந்தார். ஆனால், இனி இந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா & சரவணன், மீண்டும் சேர்த்து வைத்த பயணம் – ராஜா ராணி 2 ப்ரோமோ!
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று முதல் நடிகை காயத்ரி வரும் காட்சிகள் எபிசோடில் இடம் பெற்றுள்ளன. கண்ணன் வேலை விஷயமாக திருச்சி செல்லுகிறார். அவரை வழி அனுப்ப ஐஸ்வர்யா அவருக்கு தேவையானதை செய்து கொடுக்கிறார். அதே போல் போகும் போது அவரது போனை வைத்து விட்டு சென்று விடுகிறார். இதனால் கண்ணன் தனது அம்மா இறப்பினை எப்படி தெரிந்து கொள்வார்? என்ற ட்விஸ்ட் எழுந்துள்ளது. அதே போல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு நடிகை காயத்திரி செட் ஆவாரா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.