விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், ரோகிணி ஒரு பொய்யை மறைக்க மேலும், மேலும் பொய் சொல்கிறார். அதனால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி தன்னுடைய மலேசியா மாமா என்று சொல்லி ஒருவரை நடிக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் அவர் பயங்கரமாக குடிகாரர் என்பதால் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அங்கே கேட்கும் கேள்வியை விட அதிகமாக நடிக்க, உடனே முத்துவிற்கு பயங்கர சந்தேகம் வருகிறது. அப்போது முத்துவின் நண்பர் செல்வம் வந்து இது நம்ம பாருக்கு வருபவர் என சொல்ல முத்துவிற்கு இன்னு சந்தேகம் அதிகமாகிறது.
ஆனால் விஜயா மலேசியா மாமாவை நம்பிவிட, முத்து உண்மையை சொல்ல வருகிறார். ஆனால் அந்த சமயம் ரோகிணி மாசமாக இருப்பது போல நடிக்கிறார். உடனே விஜயாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பாட்டியும் எந்த மருமகள் முதலில் நல்ல செய்தி சொல்வார் என காத்துக் கொண்டிருந்ததால், குடும்பமே ரோகிணியை நினைத்து சந்தோசப்படுகிறார்கள்.