உயரும் அரிசியின் விலை – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தற்போது மத்திய அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரிசி விலை:
இந்தியாவை பொறுத்தவரை அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக உள்ளது. இந்த நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள போதும் இதன் விலை உயர்ந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அரிசியின் வருடாந்திர பணவீக்க விகிதம் 12 சதவீதமாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் – சில முதலீடுகளுக்கு தடை!!
இந்த நிலையில் அரிசியின் விற்பனை விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதில் அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனே அரிசி தொழிற்சங்கங்கள் குறைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அரிசியின் விலையை குறைத்து மக்கள் வாங்க ஏதுவான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.