இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் – பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்!
இந்தியாவில் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணவீக்கம்:
இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தான் சில்லறை பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்திருந்தது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்து 6.83 சதவீதமாக இருக்கிறது. இவ்வாறு பணவீக்கம் அதிகரிப்பதால் உள்நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி, தங்கத்தின் விலை, எரிபொருளின் விலை என அனைத்து விலையும் மாறுதடைகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த பணவீக்கத்தால் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதாவது, ஜூலை மாதத்தில் பருப்பு விலை 11.5 சதவீதத்தில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், அடுத்தடுத்த மாதங்களில் பருப்பின் விலை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தரிக்கு ஜோடி வெற்றியா? கார்த்திக்கா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் – “சுந்தரி” சீரியல் அப்டேட்!
தற்போது உள்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 0.2 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.