தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மின்கட்டணம் குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் குறைப்பு:
தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு 4 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதனிடையே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் மின்கட்டண முறைகளையும் கட்டணமின்றி மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
மேலும், சீசன் காலத்தில் மட்டும் இயங்கும் தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 4 முறை எவ்வித கட்டணமுமின்றி நிலைக் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.5.50ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 3மாடிகளுக்கும் மிகாமல் 10 வீடுக்கு குறைவாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மின்கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.