சிவில் தேர்வு மீண்டும் நடத்த வேண்டும்- மத்திய அரசு பரிசீலினை!!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் நடந்து முடிந்த சிவில் சர்விஸ் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மீண்டும் தேர்வு:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரசு தேர்வுகள் பல ஆன்லைனில் நடத்தி முடிக்கப்பட்டது. நடத்த முடியாத தேர்வுகளுக்கு தேதிகள் ஒத்திவைக்கப்படியுள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்விஸ் தேர்வுகளில் விண்ணப்பித்தவர்கள் பலர் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு மையங்களுக்கு பயணம் செய்யமுடியாமல் தேர்வு எழுதாமல் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மீண்டும் மாணவர்களுக்கு கொரோனா – கல்வியாளர்கள் அதிர்ச்சி!!
கொரோனா ஊரடங்கு மற்றும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வினை தள்ளிவைக்க கோரி செப்டம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் கொரோனா காரணத்தினால் தேர்வு எழுதாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த மத்திய அரசு பரிசீலிக்கலாம் என அறிவித்து வழக்கினை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு குறித்து மத்திய அரசு ‘மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறைதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
தற்போது அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை சிவில் தேர்வில் தான் பங்கேற்க முடியாமல் போனதால் மீண்டும் தேர்வு நடத்தக்கோரி ரச்சனா சிங் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கொரோனா பிரச்னையால் கடந்த தேர்வை தவற விட்டவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் தள்ளி வைப்பதாக உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்