மீண்டும் மாணவர்களுக்கு கொரோனா – கல்வியாளர்கள் அதிர்ச்சி!!
கொரோனா நோய் காரணமாக கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் வரிசையில் தற்போது மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல்:
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டதன் விளைவாக சென்னை ஐஐடியில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதும் முதலில் 700 பேருக்கு பரிசோதை செய்யப்பட்டதில் 190-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.டிசம்பர் 16 வரை 6344 கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான மறுகலந்தாய்வு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவருக்கு கடந்த வியாழன் அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த மாணவர் கொரோனா நோய்க்கான சிறப்பு மருத்துவமனையில் வைத்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
அரியர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்
இதனிடையே அவரோடு உடனிருந்த 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். கொரோனா நோய் குறைந்து வரும் நேரத்தில் கல்லூரிகள் மூலம் நோய் தொற்று அதிகரிப்பது கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்