
அதிக வட்டிக்கு வாங்கிய விட்டு கடனை திரும்ப செலுத்த முடியலையா..? RBI அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல் ..
நாட்டில் நிகழும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மேலும், மக்களின் பண புழக்கத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, ஆண்டுதோறும் “நிதி கொள்கை குழு கூட்டம்” அமைத்து அதன் மூலம் பல்வேறு கடன்களுக்கான முக்கியமான முடிவுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை மாற்றம்.. மீறினால் இத்தனை லட்சம் அபராதமா?? விவரம் உள்ளே!!
அதாவது, “இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா” தலைமையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நேற்று (05-02-2025) தொடங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,
ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தால், தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பு தொடர்பான சலுகைகளை பின்பற்ற நேரிடும் என கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன், வாகன கடனுக்கான தவணை தொகை குறையும் என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























