விசா, மாஸ்டர் கார்டில் இருந்து வணிக கட்டணம் செலுத்துவதை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக தடை செய்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி:
பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மற்றொரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, விசா, மாஸ்டர் கார்டு நெட்வொர்க்குக்குகள் மற்றும் சில சிறிய நிறுவனங்களால் செயல்படும் கார்டுகளுக்கு வணிகப் பணம் செலுத்துவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், வணிக விற்பனை நிலையங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, வணிக கார்டுகள் மூலமாக செய்யப்படும் அனைத்து வணிக கட்டணங்களையும் மறு உத்தரவு வரும் வரையிலும் நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி எந்தவித சரியான காரணத்தையும் வெளியிடவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால் வாடகை மற்றும் கல்வி கட்டணம் செலுத்துவதில் சில குழப்பங்கள் இருக்கலாம்.